திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்

இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20ஆம் தேதியிலும், ஆங்கிலம் மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கார்த்திகை மகா தீபம்

தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம். மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 7 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதும் ஐதீகம்.

தீப திருநாளுக்கு தயாராகும் முறை

வாசலின் இரு முனையில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பதே கட்டாயம், மீதம் உள்ள இடங்களில் பழைய விளக்குகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் விளக்குகளை முதல் நாளே சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். தீபத்திருநாள் செவ்வாய்க்கிழமை வருவதால் அன்று விளக்குகளை கழுவுவது சரியானது அல்ல. அதனால் முதல் நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமையே விளக்குகளை கழுவி வைத்து கொள்ளலாம்.

தீபத்திருநாள் அன்று சுத்தமான விளக்குகளில் புதிதாக எண்ணெய் ஊற்றியே விளக்கு ஏற்ற வேண்டும். ஏற்கனவே தினசரி ஏற்றி வந்த விளக்கில் இருந்த எண்ணெயில் ஏற்றுதல் தவறு. கண்டிப்பாக விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கார்த்திகை தீபத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே புதிய அகல் விளக்குளை வாங்கி, தண்ணீரில் நன்றாக நனைத்து, பிறகு அதை வெயிலில் காய வைக்க வேண்டும். இந்த விளக்குகளில் மஞ்சள், குங்குமம் வைத்து தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கை தரையில் வைக்கக் கூடாது. இதனால் எத்தனை தீபங்கள் ஏற்றுகிறோமோ அதற்கு ஏற்றது போல் வாழை இலை, ஆலம் இலை, அரச இலை ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவது மிக மிக தவறாகும்.

எத்தனை முகம் தீபம் ஏற்ற வேண்டும்?

குத்துவிளக்கு ஏற்றும் போது ஒரு முகம் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், இரு முகம் ஏற்றினால் குடும்பத்தில் நன்மை உண்டாகும், 3 முகம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும், 4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், 5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.

error: Content is protected !!
Call Now