மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை – எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

மகாளய அமாவாசை தினத்தில் மட்டுமல்ல மகாளய பட்சம் துவங்கியது முதலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். மகாளய பட்சத்தின் முதல் நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும். இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும். மூன்றாம் நாளான திருதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய நாளாக அமாவாசை கருதப்படுகிறது. அமாவாசையில் விரதமிருந்து, முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மாதத்திற்கு ஒன்று என்ற கணக்கில் வருடத்திற்கு 12 அமாவாசைகள் வருகின்றன. இவற்றில் தை மாதத்தில் வரும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை ஆகியன முக்கியமானதாகக் கருதப்படுகிறது

வருடம் முழுவதும் அமாவாசை விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், இந்த 3 அமாவாசைகளில் மட்டும் விரதம் இருந்தால் கூட வருடம் முழுவதும் அமாவாசை விரதம் கடைப்பிடித்த பலனை பெற்ற விடலாம் என சொல்லப்படுகிறது. அமாவாசை தினங்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அமாவாசை விரதம் தரும் பலன்கள் :

அமாவாசை தினங்களில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும் மற்ற அமாவாசைகளை விட மகாளய அமாவாசை முக்கியமானதாக கருதப்படுகிறது.

பித்ருக்களின் ஆராதனைக்கு மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். இதற்கு காரணம் மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்கள் நம்மோடு தங்கி இருக்கும் காலம் என சொல்லப்படுகிறது. ஆவணி மாத பெளர்ணமிக்கு அடுத்த நாள் துவங்கி புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் கூட்டமாக வந்து நம்முடன் தங்கி இருந்து, அவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யும் முறைகளை பார்த்து, மனம் குளிர்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள் என சொல்லப்படுகிறது. இதனால் தான் மகாளய பட்ச விரதமும், மகாளய அமாவாசை விரதமும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நற்கதி அடைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவர செய்யாததற்கான பிராயச்சித்தமாக மகாளய பட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது. நமது மூதாதையர்களின் ஆசீர்வாதம் நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்தவொரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

​மகாளய பட்ச எந்த திதியில் என்ன பலன்?

எந்த திதியில் என்ன பலன்?

மகாளய அமாவாசை தினத்தில் மட்டுமல்ல மகாளய பட்சம் துவங்கியது முதலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

மகாளய பட்சத்தின் முதல் நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.

இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும்.

மூன்றாம் நாளான திருதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

நான்காம் நாளான சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்வதால் எதிரிகளின் தொல்லை இல்லாமல் வாழலாம்.

ஐந்தாம் நாளான பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் செல்வம் சேரும், நியாயமான சொத்துக்கள் கிடைக்கும். மேலும் வீடு, நிலம் முதலான சொத்துக்களை வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

ஆறாம் நாளான சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும், புகழும் கிடைக்கும்.

ஏழாம் நாளான சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் உத்தியோகத்தில் தலைமை பதவி கிடைக்கும், தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

எட்டாம் நாளான அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.

ஒன்பதாம் நாளான நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமணத்தடை நீங்கும். சிறந்த வாழ்க்கை துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அல்லது மருமகன் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

பத்தாம் நாளான தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்துவந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பதினொன்றாம் நாளான ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலைகளில் வளர்ச்சி அடைவார்கள்.

பன்னிரண்டாம் நாளான துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்க நகைகள் சேரும். விலை உயர்ந்த ஆடை சேர்க்கை உண்டாகும்.

பதின்மூன்றாம் நாளான திரியோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

பதினான்காம் நாளான சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.

அடுத்து வரும் பதினைந்தாம் நாளானது மகாளய அமாவாசை. மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

error: Content is protected !!
Call Now